Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி வன்முறை வழக்கு- தேடப்பட்ட ஆம் ஆத்மி மாஜி கவுன்சிலர் தாஹிர் உசைன் சரண்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி வன்முறை வழக்குகளில் தேடப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைன் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் பாஜக ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கொடூர தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர்.

Delh IB Officer Murder: Tahir Hussain surrenders before court

இதில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இந்த தாக்குதல்களில் 45 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இம்மோதல்களில் அங்கித் சர்மா என்ற உளவுப்பிரிவு அதிகாரியும் உயிரிழந்தார்.

அங்கித் சர்மா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைனை தேடி வந்தது. இந்த கொலை வழக்கில் தாஹிர் உசைன் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்டார். இதனையடுத்து தாஹிர் உசைன் தலைமறைவானர். இதனால் அவரை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது.

அதேநேரத்தில் தமக்கும் உளவுப் பிரிவு அதிகாரி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறிவந்தார். இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் தாஹிர் உசைன் இன்று சரணடைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+