800+ விமானங்கள் தாமதம்! டெல்லி விமான நிலையத்தில் சைபர் தாக்குதலா? மத்திய அரசு விளக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் 800க்கும் அதிகமான உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் தாமதமாகியுள்ளன. இதற்கு காரணம் சைபர் தாக்குதல் என்று தகவல்கள் பரவிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு என்று விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள், டெல்லி விமான நிலையத்தில் தங்கள் விமானங்களின் தாமதத்திற்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள்தான் காரணம் என்று கூறியிருந்தன. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications