ஒரு நாள், 2 நாள் அல்ல.. மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. கொரோனா பீதியால் டெல்லி அரசு அறிவிப்பு
டெல்லி: ஒன்றல்ல, இரண்டல்ல, மார்ச் 31-ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அம்மாநில அரசு. கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கைதான் இதற்கு காரணம்.
இந்தியாவில் இதுவரை 30 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தியா மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள ஒரு நாடு. எனவே இப்போது இருந்தே கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால்தான் அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.

இதை அடுத்துதான் ஹோலி பண்டிகையைக் கொண்டாடப் போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், டெல்லி மாநில அரசு இன்று ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அளித்த பேட்டியில், ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். அரசு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது சுமார் ஒரு மாத காலத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்வு மாதமான மார்ச்சில் அளிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக தேர்வு காலங்களில் தொடர்சியாக பள்ளிகள் நடத்தப்படுவது கிடையாது. சில நாட்கள் விட்டுவிட்டு கூட பள்ளிகள் நடைபெறும். மேலும் இந்த மாதத்துடன் தேர்வை நடத்தி விட்டு கோடை விடுமுறையை கூட அறிவித்து இருக்க முடியும். அப்படி இருந்தும் எந்த ஒரு ரிஸ்க்கிற்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில், அரசு தெளிவாக இருக்கிறது. எனவே தான் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications