துப்பாக்கியுடன் ஆவேசமாக வந்தார்.. போலீஸ் வேடிக்கை பார்த்துச்சு.. அதிர்ச்சியுடன் விவரிக்கும் மாணவி
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த கல்லூரி மாணவி ஆம்னா ஆசிப் விவரித்துள்ளார்.
டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் இன்று போராடிக்கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென கூட்டத்திற்கு வந்தார்.

இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவைச் சேர்ந்த சதாப் என்ற மாணவர் காயம் அடைந்தார். இதனால் அப்போது சுற்றியிருந்த மக்கள் அலறி சிதறி ஓடினார். போலீஸ் கண்முன்னே இந்த சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மாணவர் பெயர் சதாம் பாரூக், ஜாமியா பல்கலைக்கழகத்தில் எம்ஏ மாஸ் கம்யூனிகேசன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டவர் பெயர் தெரியவந்துள்ளது. அவரது பெயர் ராம்பகத் கோபால் சர்மா என்பது அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஜேவரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கோபால் சர்மாவை கைது செய்த டெல்லி போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு கல்லூரி மாணவி ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு யார் என்றே அடையாம் தெரியாத அந்த மர்ம நபர் ஆவேசத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற போது நாங்கள் தடுப்புகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தோம். அவர் துப்பாக்கியுடன் எங்களை நோக்கி ஓடிவந்தார்.
நாங்கள் அனைவரும் அவரை தடுத்து அமைதிப்படுத்த முயன்றோம். முடியவில்லை. அப்போது காவல் துறையினரை அழைத்து தடுக்குமாறு கூறினோம். ஆனால் அவர்கள் அருகிலேயே அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவரின் கையில் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஒரு மாணவனை அவர் திடீரென சுட்டுவிட்டார்" இவ்வாறு மாணவி ஆம்னாஆசிப் பகீர் சம்பவத்தை விவரித்தார்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications