டெல்லி: நிஜமாகும் எக்ஸிட் போல் முடிவுகள்... தொடக்கத்திலேயே ஜரூர் முன்னிலையில் ஆம் ஆத்மி
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
21 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சிதான் தபால் வாக்குகளில் அதிரடியான முன்னணியில் இருந்து வருகிறது.
டெல்லி தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் , ஆளும் ஆம் ஆத்மி கட்சியே மிக பிரமாண்ட வெற்றியை பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் இதை உறுதி செய்யும் விதமாக இருக்கின்றன.