காங். தலைவர் யார்? கேள்வி கேட்டு கொந்தளித்த கபில்சிபல்- அழுகிய தக்காளிகளை அள்ளி வீசி போராட்டம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர்? கட்சியின் முடிவுகளை எடுப்பது யார்? என கலகக் குரல் எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் வீடு மீது அக்கட்சி தொண்டர்கள் அழுகிய தக்காளிகளை வீசி போராட்டம் நடத்தினர்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி உட்கட்சி மோதல்களால் சிதறும் வாய்ப்புள்ளது.

அமித்ஷாவுடன் அமரீந்தர்சிங் சந்திப்பு
பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். இதனையடுத்து அமரீந்தர்சிங் பாஜகவில் இணையலாம் அல்லது தனிக்கட்சி தொடங்கலாம் என தெரிகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் மாஜி முதல்வர்
இதேபோல் கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கோவா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. கோவாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விஸ்வரூபம் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

கபில் சிபல் கொந்தளிப்பு
இப்படி காங்கிரஸ் செல்வாக்கான மாநிலங்களில் அந்த கட்சிக்குள் குழப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர், எல்லை மாநிலமான பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இப்படி குழப்பம் நிலவுவது பாகிஸ்தானுக்குதான் சாதகம். காங்கிரஸ் கமிட்டியில் யார் தான் தலைவர் என்பது தெரியவில்லை. இன்னமும் உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவகாரங்களில் யார்தான் முடிவு எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை உடனடியாக விவாதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் மாற்றம் வேண்டும் என சோனியா காந்திக்கு 23 தலைவர்கள் கடிதம் எழுதினோம். அதற்கு இதுவரை பதிலும் கிடைக்கவில்லை என்றார். இதே கருத்தை மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் தெரிவித்திருந்தார்.

காங். தொண்டர்கள் போராட்டம்
கபில் சிபலின் வெளிப்படையான இந்த விமர்சனம் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள கபில் சிபல் வீட்டை நேற்று இரவு காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அப்போது கபில் சிபல் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்கிற பதாகைகளை ஏந்தி இருந்தனர். அத்துடன் அழுகிய தக்காளிகளை கபில் சிபல் வீடு மீதும் காங்கிரஸ் கட்சியினர் வீசி எறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது கபில் சிபல் காரையும் காங்கிரஸ் தொண்டர்கள் சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications