டெல்லி மதுபான கொள்கை ஊழல்: தெலுங்கானா எம்எல்சி கவிதா ஜாமீன் மனு டிஸ்மிஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு எனும் புயல் தொடர்ந்து வீசிக் கொண்டே இருக்கிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 15-ந் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். முன்னதாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

Delhi court dismisses interim bail application of BRS MLC K Kavitha

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் இணைந்து கவிதா முறைகேட்டில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ100 கோடி கொடுத்தார் என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையிலேயே கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் தமக்கு இடைக்கால ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் கவிதா. ஆனால் கவிதாவின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+