பெண் பேஷன் டிசைனர், பணியாள் கொலைகளில் திடீர் திருப்பம்... டெய்லர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
Recommended Video
டெல்லி: டெல்லியில் பேஷன் டிசைனர் மற்றும் பணியாள் கொலையில் திடீர் திருப்பம் எற்பட்டுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் என்கிளேவ் பகுதியை சேர்ந்தவர் மாலா லக்கானி. இவர் பேஷன் டிசைனர் ஆவார். இவரது பணியாள் பகதூர்.
இந்நிலையில் லக்கானியும், பகதூரும் நேற்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் லக்கானியின் வீட்டை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது லக்கானி வீட்டுக்கு 3 பேர் செல்வதும் பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர்கள் திரும்பி வருவதும் தெரியவந்தது. மேலும் அதைத் தொடர்ந்து லக்கானி வெளியே வராததையும் போலீஸார் கவனித்தனர்.
விசாரணை
எனவே இந்த கொலையில் இந்த மூவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது ராகுல் அன்வர் என்பவரை இன்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு உறவினர்களை வைத்து ராகுல்தான் லக்கானியையும் அவரது பணியாளையும் கொன்றது தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் லக்கானியின் பேஷன் டிசைனிங் கடையில் பணியாளராக பணியாற்றினேன்.
ஆத்திரம்
அப்போது என்னை வேலையை விட்டு லக்கானி நிறுத்திவிட்டார். எனினும் எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டதற்கு அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் மீது ஆத்திரத்துடன் இருந்தேன்.
கொன்றேன்
இதையடுத்து புதன்கிழமை இரவு லக்கானியின் வீட்டுக்கு சென்று மறுபடியும் சம்பள பாக்கியை கேட்டேன். அப்போதும் லக்கானி மறுத்ததால் ஆத்திரமடைந்து அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினேன். அவர் வலியால் அலறினார். அப்போது அவரை காப்பாற்ற பணியாள் பகதூர் வந்தார்.
மூவர் கைது
அவரையும் நாங்கள் மூவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதில் இருவரும் இறந்துவிட்டனர். இதையடுத்து எங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க வீட்டில் திருட்டு நடந்தது போல் செட் அப் செய்து சில பொருட்களை கொள்ளையடித்து சென்றோம் என்றார். இதையடுத்து போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.