Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் தட்டுப்பாடு இல்லை என சொல்லும் அரசு.. நீதிமன்ற வளாகத்திலேயே சிலிண்டர் காலியானதால் கேன்டீன் மூடல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் தொடரும் சூழலில், அது உலகளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இதனால் கேஸ் சிலிண்டர் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒரு பக்கம் மத்திய அரசு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை எனச் சொல்லும் சூழலில், மற்றொரு பக்கம் டெல்லி உயர்நீதிமன்ற வளாகமே கேஸ் சிலிண்டர் சப்ளை இல்லாமல் பாதிப்பை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த மாதம் 28ம் தேதி மோதல் வெடித்தது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மோதல் 2வது வாரமாக இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாகப் பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ள சூழலில், இந்தியாவில் கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Delhi High court Lawyers Canteen Halts Main Course Over LPG Cylinder Shortage Amid Oil Crisis

சிலிண்டர்

சிலிண்டர் புக் செய்தால் பல நாட்களுக்கு பிறகே டெலிவரி கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், பலரும் கையிருப்பில் ஒரு சிலிண்டரையாவது வாங்கி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இருப்பினும், கேஸ் சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு இல்லை என்றும் உற்பத்தியை 10% வரை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இதுபோல விளக்கம் கொடுக்கும் சூழலில், டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்திலேயே சிலிண்டர் பற்றாக்குறை எதிரொலித்துள்ளது. அங்குள்ள வழக்கறிஞர்கள் உணவகத்திற்குத் தேவையான கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் முக்கிய உணவுகள் மெனுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோகம் எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்து தங்களுக்குத் தகவல் இல்லை என்றும் கேன்டீன் நிர்வாகம் தெரிவித்தது. இன்று பிற்கபல் கேன்டீன் நிர்வாகம் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

சிலிண்டர் பற்றாக்குறை

இது தொடர்பான அறிவிப்பை லைவ் லா வெளியிட்டது. அந்த அறிவிப்பில், "சமையல் எரிவாயு சிலிண்டர் போதியளவு கிடைக்காததால், வழக்கறிஞர்கள் உணவகத்தில் முக்கிய உணவுகளைத் தயார் செய்ய முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே மத்திய கிழக்கு மோதல் காரணமாக எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்கனவே சென்னை, பெங்களூர் உட்பட முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள சூழலில், அது இப்போது டெல்லி நீதிமன்றத்திலேயே எதிரொலித்துள்ளது.

கேன்டீன் மூடல்

கேஸ் சிலிண்டர் விநியோகம் கிடைத்தவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று உணவகம் தெரிவித்தாலும், அது எப்போது சாத்தியமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் மேலும், "கேஸ் விநியோகம் எப்போது மீட்டெடுக்கப்படும் என்பது குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை. விநியோகம் கிடைத்தவுடன் முக்கிய உணவுகளைத் தயாரிப்பதைத் தொடங்குவோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மத்திய அரசு கேஸ் சிலிண்டர் சப்ளையில் பற்றாக்குறை இல்லை.. விநியோகம் சீராக இருப்பதாகக் கூறி வரும் சூழலில், இன்னொரு பக்கம் நீதிமன்ற வளாகத்திலேயே கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

இந்த இக்கட்டான சூழலைச் சரி செய்ய மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. குழாய் வழி எரிவாயு பெறும் வீடுகள், சிஎன்ஜி (CNG) வாகனங்கள், மற்றும் கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சகம் மேலும், "மத்திய கிழக்கில் தொடரும் மோதல், ஹார்முஸ் வழித்தடம் வழியாக இயற்கை எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.. நிலைமையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை துரிதமாக எடுத்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+