டெல்லி மத கலவரத்தின் போது வெறுப்பு பேச்சு.. இன்று விசாரணை நடத்தும் டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: டெல்லியில் மத கலவரத்தை தூண்டிவிடும்படி பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் குவிந்துள்ள ஏராளமான மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர் இந்திய குடியுரிமைக் கோரி விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த சட்டமாகும்.

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகியவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. இதில் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் இடம்பெறாததால் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா உள்ளிட்டோர் வெறுப்பு பேச்சுகளை பேசினர்.
இதனால் பிப்ரவரி மாதம்23 ஆம் தேதி , 2019 -இல் வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டு 53 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அது போல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் கலவரத்திற்கு முன்னதாக வெறுப்பு பேச்சு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத கலவரத்தை தூண்டிவிட்டதாக மிஸ்ரா மற்றும் தாக்கூருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் சார்பில் மனித உரிமைகள் சட்ட அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்ய மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மாணவர் அமைப்பை சேர்ந்த உமர் காலித்தை போலீஸார் கைது செய்தனர்.
9 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவத்ஸவாவிற்கு கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளனர். அதில் உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு போராட்டக்காரர்கள் தண்டிக்கப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலையில் மேற்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications