டெல்லி மத கலவரத்தின் போது வெறுப்பு பேச்சு.. இன்று விசாரணை நடத்தும் டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: டெல்லியில் மத கலவரத்தை தூண்டிவிடும்படி பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் குவிந்துள்ள ஏராளமான மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர் இந்திய குடியுரிமைக் கோரி விண்ணப்பிக்கலாம் என்பதே இந்த சட்டமாகும்.

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி, கிறிஸ்தவர்கள் ஆகியவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. இதில் இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் இடம்பெறாததால் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா உள்ளிட்டோர் வெறுப்பு பேச்சுகளை பேசினர்.
இதனால் பிப்ரவரி மாதம்23 ஆம் தேதி , 2019 -இல் வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டு 53 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அது போல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் கலவரத்திற்கு முன்னதாக வெறுப்பு பேச்சு பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத கலவரத்தை தூண்டிவிட்டதாக மிஸ்ரா மற்றும் தாக்கூருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் சார்பில் மனித உரிமைகள் சட்ட அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்ய மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மாணவர் அமைப்பை சேர்ந்த உமர் காலித்தை போலீஸார் கைது செய்தனர்.
9 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவத்ஸவாவிற்கு கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளனர். அதில் உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு போராட்டக்காரர்கள் தண்டிக்கப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலையில் மேற்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications