டெல்லி: ஜன. 26-ல் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை- பஞ்சாப்பில் இக்பால்சிங் கைது
அமிர்தசரஸ்: டெல்லியில் ஜனவரி 26-ல் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணியில் ஊடுருவி விரும்பத்தகாத சம்பவங்களுக்கு காரணமாக இருந்த இக்பால்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக டெல்லி போலீஸ் அனுமதியுடன் ஜனவரி 26-ல் குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த டிராக்டர் பேரணியில் ஊடுருவிய சிலரால் விரும்பதகாத நிகழ்வுகள் நடத்தப்பட்டன. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர் கொடி ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்த மோதல்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதல்களுக்கு காரணமான நடிகர் தீப் சித்து உள்ளிட்ட பலரை டெல்லி போலீஸ் தேடி வந்தது. இந்த நிலையில் தீப் சித்துவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மற்றொரு தேடப்பட்ட நபரான இக்பால்சிங்கும் பஞ்சாப்பில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications