விரைவில் கைது? அமலாக்கத்துறையால் இறுகும் பிடி! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன்
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்நிலையில் தான் 6வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனேவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான பிடி இறுக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து அந்த புதிய மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும் அந்த புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரிக்க இறங்கியது. அமலாக்கத்துறை, சிபிஐ சார்பில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பியும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தான் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளித்தார். அதன்பிறகு அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார். இதுவரை 5 முறை அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவதாக கூறி அவர் விசாரணையை புறக்கணித்து வருகிறார். இதற்கிடையே தான் அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாத விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கெஜ்ரிவால் பிப்ரவரி 17 ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது.
இத்தகைய சூழலில் தான் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிரடியாக 6வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருபக்கம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 17 ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அமலாக்கத்துறை தனியே விசாரணைக்கு வரும்படி அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
நில சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் இப்படித்தான் அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்து தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்தது. அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்து வரும் நிலையில் விரைவில் அவரும் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications