Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விரைவில் கைது? அமலாக்கத்துறையால் இறுகும் பிடி! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்நிலையில் தான் 6வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனேவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான பிடி இறுக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து அந்த புதிய மதுபான கொள்கை வாபஸ் பெறப்பட்டது.

Delhi liquor policy scam: ED sends 6th summon to Delhi CM Arvind Kejriwal

இருப்பினும் அந்த புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரிக்க இறங்கியது. அமலாக்கத்துறை, சிபிஐ சார்பில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பியும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தான் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளித்தார். அதன்பிறகு அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார். இதுவரை 5 முறை அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவதாக கூறி அவர் விசாரணையை புறக்கணித்து வருகிறார். இதற்கிடையே தான் அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாத விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கெஜ்ரிவால் பிப்ரவரி 17 ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது.

இத்தகைய சூழலில் தான் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அதிரடியாக 6வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருபக்கம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 17 ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அமலாக்கத்துறை தனியே விசாரணைக்கு வரும்படி அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

நில சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் இப்படித்தான் அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்து தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்தது. அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்து வரும் நிலையில் விரைவில் அவரும் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+