ஆபாச படத்தை போல்.. மனைவிக்கு நூதன சித்ரவதை கொடுத்த கணவர்! இப்படியா செய்வாங்க? ஷாக்கில் டெல்லி
டெல்லி: டெல்லியில் ஆபாசபடத்துக்கு அடிமையான கணவர், தனது மனைவிக்கு வித்தியாசமான முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் முடிந்த பிறகு சில பெண்களிடம் அவர்களிடம் கணவர்கள் கூடுதல் வரதட்சனை கேட்பது அவ்வப்போது நடந்து வருகிறது. மேலும் சிலர் பெண்களுக்கு வித்தியாசமான முறையில் தொல்லை கொடுப்பதும், சித்ரவதை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தான் தற்போது டெல்லியில் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்துள்ளார். அப்படி என்ன நடந்தது? அவர் புகாரில் என்ன கூறியுள்ளார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

டெல்லியில் வசித்து வரும் இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த பெண்ணுக்கு தற்போது 30 வயது ஆகிறது. திருமணமான புதிதில் இந்த தம்பதி மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் தான் அதன்பிறகு இளம்பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இளம்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிகளவில் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதற் குஅவர் மறுத்த நிலையில் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மனதளவிலும் தொல்லை கொடுத்துள்ளனர். குறிப்பாக அந்த இளம்பெண்ணுக்கு அவரது கணவர் வித்தியாசமான முறையில் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இளம்பெண்ணை ஆபாசபடம் பார்க்க வலியுறுத்தியுள்ளார். அதோடு ஆபாசபடத்தில் வரும் பெண்கள் போல் உடையணிந்து கொள்ளும்படி கூறி சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களாக இதனை இளம்பெண் பொறுத்து கொண்ட நிலையில் நிலைமை எல்லை மீறி சென்றது. இதனால் மனவருத்தமடைந்த அந்த பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
அதில் தனது கணவர் ஆபாசபட அடிமை என குற்றம்சாட்டி அடுக்கடுக்கான விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛இளம்பெண்ணை ஆபாசபடம் பார்க்கும்படியும், அதில் வரும் பெண்கள் போல் ஆடை அணியும்படி கணவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கணவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ரோகித் மீனா கூறுகையில், ‛‛சம்பவம் குறித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 498 ஏ ( பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல்), 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 377 (இயற்கைக்கு மாறான குற்றம்) மற்றும் 34 (பொது நோக்கத்துடன் குற்றம் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications