‛ஆபாசபடம்’.. ஓடும் விமானத்தில் பணிப்பெண்ணை குறிவைத்த பயணி! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
டெல்லி: டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானம் புறப்பட்டபோது பயணி ஒருவர் தனது அருகே இருந்த பெண் பணியாளரை செல்போனில் ரகசியமாக ஆபாச போட்டோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்தபோது மன்னிப்பு கோரிய தப்பிய பயணி தற்போது ஏற்பட்டுள்ள திடீர் ட்விஸ்ட்டால் வசமாக சிக்கி உள்ளார்.
விமான பயணிகளின்போது சில பயணிகள் விமான பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகளிடம் பிரச்சனையில் ஈடுபடும் செயல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது டெல்லி-மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு கடந்த 2ம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் விமான பணிப்பெண்கள், பயணிகள் பயணித்தனர்.
இந்த விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டபோது முதல் வரிசையில் இருந்த ஆண் பயணியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது அவர் தனது செல்போனில் அருகே இருந்த விமான பெண் பயணி ஒருவரை ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளார். அதேபோல் அவர் தனது அருகே இருந்த பெண் பயணிக்கும் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தன்னை செல்போனில் பயணி போட்டோ எடுப்பதை விமான பணிப்பெண் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக சம்பவம் குறித்து பிற ஊழியர்களிடம் கூறினார். இதையடுத்து விமானத்தில் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து அந்த பயணியின் செல்போனை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் விமான பணிப்பெண்ணின் போட்டோக்கள் இருந்தன. அந்த போட்டோக்கள் உடனடியாக டெலிட் செய்யப்பட்டன.
மேலும் நடந்த சம்பவத்துக்கு அந்த பயணி மன்னிப்பு கோரினார். அதோடு தான் தவறை உணர்ந்துவிட்டேன் எனக்கூறி அவர் எழுத்துப்பூர்வமாகவும் கடிதம் எழுதி மன்னிப்பு கோரினார். இதையடுத்து பயணி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் தற்போது அந்த சம்பவத்தில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

அதாவது விமானத்தில் சம்பவம் தொடர்பான வீடியோ என்பது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீஸ் மற்றும் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.
இதுபற்றி டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறுகையில், ‛‛விமானங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் விமான போக்கவரத்து டைரக்டர் ஜெனரல் சகிப்புத்தன்மை காட்டக்காது'' என தெரிவித்துள்ளார். இதனால் விமானத்தில் பெண் விமான பணிப்பெண்ணை செல்போனில் படம்பிடித்த பயணி சிக்கலில் சிக்கி உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications