டெல்லியில் மடமடவென உயரும் கொரோனா கேஸ்கள்.. காரணம் என்ன?.. திக்குமுக்காடும் தலைநகரம்
டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் கேஸ்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 131 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 89 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகம், டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு முன்னணி இடத்தில் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக டெல்லியில் 7,486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 131 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 7,943 ஆக உள்ளது.

பாதிப்பு
செவ்வாய்க்கிழமை அன்று 62 ஆயிரம் பேருக்கு புதிதாக நடத்தப்பட்ட சோதனையில் 12.03 சதவீதம் பேர் பண்டிகை காலம் மற்றும் மாசு அதிகரித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை கூறுகிறது.

எண்ணிக்கை
நவம்பர் மாதம் 11-ஆம் தேதி ஒரே நாளில் கொரோனாவால் 8,593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 42,458 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,03,084 ஆகும்.

ஹரியானா
டெல்லியில் கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருமண விழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஹரியானா அரசு தன் மாநில மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மாஸ்குகள்
இந்தியாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் டெல்லியில் நிலைமையோ வித்தியாசமாக இருக்கிறது. 2 கோடி மக்கள் காற்று மாசால் அவதிப்படுகிறார்கள். தீபாவளிக்கு கடந்த வாரம் ஷாப்பிங் சென்றதால் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது. மக்கள் மாஸ்க் போட வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications