டெல்லியில் வன்முறையாளர்கள் வெறியாட்டம்- பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு- சரமாரி தாக்கு
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் பல இடங்களில் வன்முறை கும்பல் தொடர்ந்து வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் பலரும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video
சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் மீது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் நேற்று நடந்த தாக்குதல் வன்முறைகள் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை டெல்லி வன்முறைகளில் 8 பேர் பலியாகி உள்ளனர். 160 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லியில் இன்று காலை முதல் பல இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தினர். வன்முறைகளைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பவும் மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்தாம்புரி பகுதியில் இரு பிரிவினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். மெளஜ்புர் பகுதியில் தனியார் டிவி சேனல் செய்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் பல செய்தியாளர்களும் மிக மோசமாக கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications