டெல்லி கலவரம்.. எதிர்க்கட்சிகள் விடாமல் அமளி.. மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு.. பணிகள் முடங்கியது!
டெல்லி: டெல்லி கலவரம் காரணமாக மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய சில நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டார் .
நேற்று மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கூடியது. இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.இது தொடர்பான விவாதம் கடந்த மாதம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அவை கூடியுள்ளது.

ஏப்ரல் 3ஆம் தேதி வரை அவை நடைபெறுகிறது. இன்று லோக்சபாவில் முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வங்கி பரிவர்த்தனை ஒழுங்காற்று மசோதா, நேரடி வரி விவித் சே விஷ்வாஸ் எனப்படும் நிதி அமைச்சக மசோதா , விமான மசோதா எனப்படும் விமானங்கள் தொடர்பான பாதுகாப்பு துறை மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தொடர் நேற்று டெல்லி கலவரம் தொடர்பான வாதத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இன்று டெல்லி கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி கலவரம்தான் இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய இடம் பிடித்தது.
டெல்லி கலவரத்தில் 46 பேர் பலியானது குறித்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்பது குறித்தும் இன்று விவாதிக்க வேண்டும் என்று அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தது. ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுப்பட்டனர். அவைக்கு முன்பாக வந்து கோஷங்களை எழுப்பினார். இதனால் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது.
இதனால் கோபம் அடைந்த ஓம் பிர்லா , எம்பிக்கள் யாரும் அவைக்கு முன்னே வர கூடாது. அவைக்கு முன் வந்து அமளி செய்ய கூடாது. அதேபோல் போஸ்டர்களை அவைக்கு எடுத்து வந்து கலகம் செய்ய கூடாது என்று கூறினார். அப்படி செய்தால் அந்த எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
ஆனால் தொடர்ந்து எம்பிக்கள் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி சில நிமிடத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications