குக்கரால் தலையில் அடித்து... காதலியின் தந்தை படுகொலை ... காதலன் வெறிச்செயல்!
டெல்லி: டெல்லியில் காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தையை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியும், குக்கரால் தலையில் அடித்தும் கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டு தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தலைநகர் டெல்லியில் சோனியா விஹார் பகுதியை சேர்ந்தவர் பிஜேந்தர் சிங்(50). இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பிஜேந்தர் சிங், 24 வயது இளம்பெண் ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அந்த பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த சூரஜ் குமார் குமார்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.
இது குறித்து வளர்ப்பு பெற்றோர்களான பிஜேந்தர் சிங்கும், அவரது மனைவியும் கண்டித்தனர். ஆனால் அந்த பெண் சூரஜுடன் பழகுவதை நிறுத்தாததால் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அவளை பெற்றெடுத்த தாய்-தந்தையிடம் விட்டனர். அப்போது உபியில் உள்ள அந்த பெண்ணின் உண்மையான பெற்றோரிடம் சூரஜின் பெற்றோர் பெண் கேட்டு சென்றனர். ஆனால் பிஜேந்தர் சிங், இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என தெரிவித்தார்.
எளிதாக கிடைக்கும் லோன்கள்... அதிகரிக்கும் வீட்டுமனை விற்பனை... தரவுகள் கூறுவது என்ன!
இதனால் ஆத்திரம் அடைந்த சூரஜ் பிஜேந்தர் சிங்கை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி சூரஜ் பிஜேந்தர் சிங்கின் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தி, குக்கரை எடுத்து மண்டையில் அடித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சூரஜ் குமாரை போலீசார் கைது செய்தனர்.