தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் வெளியிட்டு வருகிறார்.

dharmendra kumar and alok vardhan appointed as TN assembly 2021 electoral observers

இதில், 88936 வாக்கு பதிவு மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலை ஒப்பிடும் பொழுது 34.73 சதவிகித வாக்கு பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் 44 தனித் தொகுதிகள், 2 பழங்குடியினர் தொகுதிகள் உள்ளன.

5 மாநிலங்களின் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு நேரம் 5 மாநிலங்களிலும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்படும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது இரண்டு பேர் மட்டுமே உடன் வரவேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 30.8 லட்சம் ரூபாய் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+