வேகமாக பரவும் ஓமிக்ரான்.. "இந்த 2 தடுப்பூசிகளை தவிர" மற்றதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வைரஸ்!
டெல்லி: உலகில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளால் ஓமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரானால் இதுவரை 170-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள்தான் தீர்வு என சொல்லப்பட்டு மக்கள் தடுப்பூசிகளை போடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் இந்தியா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இது தடுப்பூசிக்கு மசியாது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இது போன்ற வேரியண்ட்டை கட்டுப்படுத்த 3-ஆவது பூஸ்டர் டோஸ் அவசியமா இல்லையா என்பதை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அமெரிக்கா
இந்தியாவை போன்று ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. இந்த நிலையில் உலகில் உள்ள தடுப்பூசிகளால் ஓமிக்ரான் போன்ற வீரியமிக்க வேரியண்ட்களை எதிர்கொள்வது கடினமானது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மாடர்னா
அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகியவை பூஸ்டர் டோஸுடன் போடும் போது புதிய வைரஸ்களின் பரவல்களை தடுக்கும். ஆனால் அந்த வேக்சின்கள் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. அது போல் ஆஸ்ட்ராஜெனிகா, ஜான்சன் மற்றும் ஜான்சன், சீனா, ரஷ்யாவில் (ஸ்பூட்னிக்) உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தாது.

செயல்திறன்
உலகளவில் பலர் இன்னும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாத நிலையில் இது போன்ற தடுப்பூசியின் செயல்திறன் குறித்த கேள்வி எழுந்துள்ளது வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஃபைசர் மற்றும் மாடர்னாவில் எம் ஆர்என்ஏ தொழில்நுட்பம் கொண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதால் அவை சிறப்பாக செயல்படுகின்றன. மற்றவை எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பழமையான முறையில் தயாரிக்கப்பட்டதாகும்.

சினோவாக்
சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவாக் ஆகிய தடுப்பூசிகள் உலகில் உள்ள 50 சதவீத நாடுகளில் கிடைக்கிறது. ஆனால் அவரை ஓமிக்ரானை எதிர்த்து போராடக் கூடியதல்ல. ஆனால் சீனாவில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த ஊசியை செலுத்திக் கொண்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கக் கூடிய மெக்சிகோ மற்றும் பிரேசிலிலும் இந்த தடுப்பூசியே பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிரிக்கா
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசியும் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு- ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியும் போட்டுக் கொண்ட 6 மாதங்கள் கழித்து புதிய வைரஸை எதிர்த்து போராட முடியாதது என தெரிகிறது. இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினும் இதே போல் ஓமிக்ரானை எதிர்க்கும் வல்லமை இல்லாதது. இவையும் உலகளவில் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 90 சதவீதம் பேர் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். 44 நாடுகளுக்கு இந்த தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications