பத்து ரூவா நோட்டு தெரியும்.. அதென்ன ஜீரோ ரூபாய் நோட்டு?.. சிறப்பம்சங்கள் என்ன? முழு விவரம்!
டெல்லி: இந்தியாவில் ஜீரோ மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு இருக்கிறதை நீங்கள் அறிவீர்களா? அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
காலனா, அரையனா, ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய், ரூ 2, ரூ 5, ரூ 10, ரூ 20, ரூ 50, ரூ 100 உள்ளிட்ட இந்திய ரூபாய் நோட்டுகளையும் காயின்களையும் அனைவருக்கும் தெரியும்.
இதையடுத்து ரூ 500, ரூ 1000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தது. இ்நத நிலையில் கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ 500, ரூ 1000 செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

வங்கி
மேலும் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியிலோ அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்துவிட்டு புதிய ரூ 500, ரூ 2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக எத்தனையோ பேர் வங்கி வாசலிலும் போஸ்ட் ஆபீஸ் வாயிலிலும் காத்திருந்தனர். பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இதெல்லாம் சரி.. ஜீரோ ரூபாய் நோட்டை நீங்கள் பார்த்ததுண்டா?

ஜீரோ ரூபாய்
இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜீரோ ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவை ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டாலும் இவை புழக்கத்தில் இல்லாததால் பலருக்கு இதை பற்றி தெரியாது. இந்த நோட்டுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த ரூபாய் நோட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமாகிவிட்டது. தமிழகத்தை சேர்ந்த ஐந்தாவது தூண் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் இந்த நோட்டை அறிமுகப்படுத்தியது. இது ஊழலை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது.

லஞ்சம்
நேர்மையற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்க நோட்டின் பின்பக்கத்தில் உரிய அரசு அதிகாரிகளின் தொடர்பு விவரங்களுடன் ஜீரோ ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஊழல் செய்யும் ஒரு அதிகாரி லஞ்சம் கேட்டால் இந்த ஜீரோ ரூபாய் நோட்டை லஞ்சமாக கொடுங்கள் என மக்களை இந்த ஐந்தாவது தூண் ஊக்குவிக்கிறது.

எத்தனை மொழிகள்
இந்த நோட்டுகள் 30 மில்லியன் உள்ளன. இவை இந்தி, தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களுக்கு இந்த நோட்டை கொடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கவும் என்ர வாசகம் அதில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: https://5thpillar.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications