இதயம் வலிக்கிறதா? இலங்கை அகதிகள் பிரச்சினை.. அமித் ஷாவை சந்திக்க தயார்..திமுக எம்பி கனிமொடி அதிரடி!
டெல்லி: இலங்கை தமிழ் அகதிகள் பிரச்னை தீருமானால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச தயார் எனவும், திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினையை ஒன்றிய அரசிடம் எழுப்பவில்லை என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது தவறானது என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அவையில் இன்று குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதா தொடர்பான விவாதம் நடந்தது, அதில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி, இந்த மசோதாவில் சிறப்பு பரிந்துரைகளை இணைக்க வேண்டும், இலங்கை தமிழ் அதிக அகதிகளை நீண்ட கால அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இத்தனை தமிழ் அகதிகள் வந்திருந்தார்கள் என்று தெரிவித்தார். அவர் மிகவும் நன்றாக பேசினார். அகதிகள் விஷயத்தில் கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ அதே மாதிரி தான் எனக்கும் வலிக்கிறது. அதே நேரத்தில் இலங்கை அகதிகள் விஷயத்தில் ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என சரமாரி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இலங்கை தமிழ் அகதிகள் பிரச்னை தீருமானால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச தயார் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்," இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினையை நான் டிசம்பர் 2009 இல் மாநிலங்களவையில் எழுப்பினேன், சட்டரீதியான விளக்கம் மற்றும் குடியுரிமை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன். 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளின் பாராளுமன்ற பதிவுகள் இதற்குச் சாட்சியமாக உள்ளன.
இது புதிய பிரச்சினை அல்ல. எங்கள் மக்களின் நலனுக்காக, எந்த புகழையும் எதிர்பார்க்காமல், நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தனிப்பட்ட சந்திப்பை நாடுவது உதவும் என்றால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்யவும் தயங்க மாட்டார்கள் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, கடந்த 2017இல் மாநிலங்களவையில் பேசிய கனிமொழி கருணாநிதி,," இலங்கையில் நடந்த போர்களுக்குப் பிறகு, 2009-இல் இலங்கை படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) முழுமையாகத் தோற்கடித்த பிறகு போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இலங்கைத் தமிழர்களை மறுவாழ்வு செய்ய வேண்டும் என்று இரு நாடுகளிலும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் உண்மையில், எவ்வளவு மறுவாழ்வு நடந்துள்ளது? அவர்களுக்கு எவ்வளவு உதவி வழங்கப்பட்டுள்ளது? எத்தனை பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன? பெரிதாக எதுவும் இல்லை.
எவ்வளவு நடந்துள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. இலங்கையில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கவும் முடியவில்லை. இன்னமும், அங்குள்ள மக்கள் மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு வீடுகள் இல்லை. சரியான பள்ளிகள், மருத்துவ வசதிகள், தொழில், எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் - அவர்களில் பலர் இங்கே இரண்டு தலைமுறைகளாகவும், மூன்று தலைமுறைகளாகவும் இங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
திமுக எப்போதுமே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது - இந்தியக் குடியுரிமைக்காகப் போராடி வரும் இலங்கைத் தமிழர்களில், திரும்பிச் செல்ல விரும்புவோரைச் செல்ல விடுங்கள். ஆனால் இந்த அகதிகளில் பலர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்தியா அவர்களின் தாயகம். அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications