மத்திய அரசு உடனே செய்யணும்... ராஜ்யசபாவில் வால்பாறை தொழிலாளர்களுக்காக உருகிய திமுக எம்பி
டெல்லி: வால்பாறையில் போதிய அளவு ஏடிஎம்கள் இல்லாததால், சுமார் 50 ஆயிரம் எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எடுக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக ராஜ்யசபாவில் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கவலை தெரிவித்தார்.
இன்று ராஜ்யசபா கூடிய உடன் பூஜ்ஜிய நேரத்தில் திமுக மாநிலங்களவை எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தனது கேள்வியை எழுப்பலாம் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து பேசிய திமுக எம்பி இளங்கோவன், வால்பாறை குறித்து பேசினார். "கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியத்தையும் எஸ்டேட் முதலாளிகள் வங்கி கணக்கில் செலுத்துகிறார்கள். ஆனால் அங்கு மொத்தமே 3 ஏடிஎம்கள் தான் உள்ளது.
அவர்களால் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்க முடியாது. அப்படி பணம் எடுத்தால் அவர்கள் தங்களது அன்றைய நாளுக்கான ஊதியத்தை இழக்க வேண்டி உள்ளது. ஏனெனில் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்களும் ஏடிஎம்களில் பணம் எடுக்கிறார்கள். இதன்காரணமாக பணத்திற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
அங்கு மக்களுக்கு மாதம் கிடைக்கும் ஊதியமே 8 ஆயிரம் தான். அதை எடுக்க போனால் அன்றைக்கு ஊதியத்தை இழக்க வேண்டியநிலையில் வால்பாறை மக்கள் உள்ளார்கள். எனவே அரசு அங்கு ஏடிஎம்களை அதிகப்படுத்த வேண்டும். அல்லது அதே வேளையில் 15 ஆயிரத்துக்கு கீழ் வழங்கப்படும் ஊதியங்களை நேரடியாக கைகளில் கொடுக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். வால்பாறையில் வெறும் 8 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் சென்று எடுக்க மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு ஊதியத்தை கையிலேயே கொடுக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications