"வெட்கம்! வெட்கம்!" திமுக எம்பிக்கள் வெளிநடப்பு! டிவியில் போய் பாருங்க! கடுகடுத்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதத்தில் இன்று எய்ம்ஸ் மருத்துவனைக் குறித்து காரசார விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

நேற்றைய தினம் காங்கிரஸில் ராகுல் காந்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து உரையாற்றினார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து இரு தரப்பிற்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடுதலாக மொத்தம் 900 படுக்கைகள்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தமிழ்நாடு அரசுக்குக் கடன் சுமையே இல்லை.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2022 முதல் படித்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி.. ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது.. கடன் வாங்கி கட்டுகிறோமா இல்லை நிதி ஒதுக்குகிறோமா என்பது எங்கள் விருப்பம். அது எங்களுடைய கொள்கை சார்ந்த முடிவு.. தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை; நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஆக தமிழக அரசே காரணம். எனவே, மதுரை எய்மஸ் கட்டுமான தாமதத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது. அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்.
பொதுவாக 700 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன; ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. இவை தொற்று நோய் பரவல் ஏற்படும் போது பெரியளவில் உதவியாக இருக்கும்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 99 மாணவர்கள் இப்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்கள்" என்றார்.
அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். குறிப்பா நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகையில் திமுக எம்பிக்கள் வெட்கம்! வெட்கம்! எப்போது? எப்போது? என முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாடு குறித்துப் பேச நிறைய இருக்கிறது. நான் சொல்கிறேன் டிவியில் சென்று பாருங்கள்" என்று ஆக்ரோஷமாகப் பதில் அளித்தார்.
மதுரை எய்ம்ஸ் மட்டுமின்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவான பதிலை அளித்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications