நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய முடியுமா? ரூல்ஸ் என்ன? அடுத்து என்ன நடக்கும்
டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரத்தைத் தொடர்ந்து நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானத்தைக் கொண்டு வரவும் திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அதற்கான நடைமுறைகள் என்ன.. இதுவரை எதாவது திமுக எம்பிக்கள் அப்படிப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலையின் மீது தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானத்தைக் கொண்டு வரவும் திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இம்பீச்மெண்ட்
1968 நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின் கீழ் தவறான நடத்தை அல்லது திறமையின்மை என்ற விதிகளின் கீழ் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இந்த இம்பீச்மெண்ட் மசோதாவை திமுக கொண்டு வர முயல்கிறது.
இந்தியாவில் பணியில் உள்ள நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது என்பது மிகப் பெரிய வேலை. ஆளும் தரப்பு உட்பட எந்தவொரு கட்சி நினைத்தாலும் அதை எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்துவிட முடியாது. அதற்கு மிகப் பெரிய ஒரு பிராசஸ் இருக்கிறது. இதற்கு மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஒரே ஒரு தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு தவறான செயல்பாடு என்ற அரசியலமைப்புச் சட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அடுத்து என்ன நடக்கும்
உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது இந்தியாவில் உள்ள மிக முக்கியமான அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளில் ஒன்றாகும். இந்தச் செயல்முறை நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. பதவி நீக்கத் தீர்மானம் எந்த அவையிலும் கொண்டுவரப்படலாம், ஆனால் அதற்கு குறிப்பிடத்தக்கது. அளவுக்கு எம்பிக்கள் ஆதரவு தேவைப்படும்.
லோக்சபாவில் இதைக் கொண்டு வரக் குறைந்தது 100 எம்பிக்கள் ஆதரவு தேவை.. அதேபோல ராஜ்யசபாவில் இந்த மசோதாவைக் கொண்டு வர 50 எம்பிக்கள் ஆதரவு தேவை. அந்த எம்பிக்களின் கையெழுத்தோடு தீர்மான நோட்டீஸை வழங்க வேண்டும். மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவைக்குத் தலைவரிடம் இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தீர்மானத்தை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை அவையின் தலைவரே முடிவு செய்வார். இந்த அதிகார நிலையே முக்கியமானது.
கமிட்டி அமைக்கப்படும்
ஒருவேளை தீர்மானத்தை அவை தலைவர் ஏற்றுக் கொண்டால்.. அதன் பிறகு மூன்று நபர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மற்றும் சட்ட நிபுணர் இருப்பார். இந்தக் குழு ஒரு விசாரணை அமைப்பைப் போலவே செயல்படும். ஆதாரங்களை ஆராய்ந்து, சாட்சிகளை விசாரிப்பார்கள். மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியிடமும் விளக்கம் கோரப்படும். அதைத் தொடர்ந்து விரிவான ரிப்போர்ட்டை இந்தக் குழு சமர்ப்பிக்கும்.
இந்த அறிக்கை மிகவும் முக்கியமானது. அதில் தான் நீதிபதி மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும். அதில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டால் முடிவு மட்டுமே தீர்மானம் அடுத்த கட்டத்திற்கு நகரும். நீதிபதி மீது தவறு உறுதி செய்யப்பட்டால் அடுத்து அந்தத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும். வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
நாடாளுமன்றம்
ஒரு நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவையில் மொத்த உறுப்பினர்களின் குறைந்தபட்சம் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் இருக்கும்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேறினால், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். அதன் பிறகே குடியரசுத் தலைவர் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய உத்தரவிடுவார்.
சமீபத்தில் இதுபோல இரு பதவிநீக்க மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் அவரை பதவிநீக்கம் செய்யுமாறு 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் வழங்கினர். இதை ஏற்ற மக்களவை சபாநாயகர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயக் குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிறைவேறியதே இல்லை
அதேநேரம் இந்தியாவில் நீதிபதி ஒருவரைப் பதவிநீக்கம் செய்வது மிகச் சிக்கலான நடைமுறையாகும். இந்திய வரலாற்றில் இதுவரை ஒரு நீதிபதி கூட பதவிநீக்கம் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications