தென்பெண்ணை ஆறு வழக்கு.. ’அரசியலை கலக்காதீர்கள்’.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!
டெல்லி: தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை டிச.14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தென்பெண்ணையாற்றில் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதனால் கர்காடகா அரசுக்கு முயற்சிக்கு தடை விதிக்க கோரியும், தென்பெண்ணையாற்றின் நீர் பங்கீடு வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பேசுகையில், 2020ம் ஆண்டு தென்பெண்ணை ஆறு நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. ஆனால் 2020க்கு பிறகு அந்த கூட்டம் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். ஏன் இதுவரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, வழக்கு விசாரணைக்கு வரும்போது மட்டும் ஏன் திடீர் நடவடிக்கை. ஒவ்வொரு முறை கால அவகாசம் கேட்கிறீர்கள். இப்படியே செய்தீர்கள் என்றால் 10ஆண்டுகள் ஆனாலும் தீர்வு கிடைக்காது.
இன்னும் எத்தனை நாளுக்கு தான் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்கள் நிலுவையிலே இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர் இன்னும் 4 வார காலத்திற்குள் தீர்ப்பாயம் அமைத்து அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 14 அன்று ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications