2019ல் உங்கள் புது வருட தீர்மானம் என்ன? எதுவும் இல்லையா ? அப்போ இதை படியுங்கள்!
2019ம் வருடம் பிறந்ததை அடுத்து நாம் சில புத்தாண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும்.
டெல்லி: 2019ம் வருடம் பிறந்ததை அடுத்து நாம் சில புத்தாண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும். இந்த வருடத்திற்கான சில புதிய தீர்மானங்களை எடுத்து நாம் 2019ம் வருடத்தை தொடங்க வேண்டும்.
எல்லா வருடமும் நாம் புதிதாக எதையாவது கற்றுக் கொண்டுதான் வருகிறோம், இந்த வருடமும் நாம் அதை போலவே புதிதாக ஒன்றை கற்க வேண்டும். நீங்கள் கடைசியாக எப்போது ஒரு புத்தகத்தை படித்தீர்கள், ஒரு கட்டுரையை எப்போது படித்தீர்கள்? என்று யோசித்து பாருங்கள்.
நீங்கள் அதிகமாக படிப்பது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் தானா, எல்லா மக்களையும் போலத்தான் நீங்களுமா? எல்லாம் மக்களையும் போல உங்களுக்கு படிப்பது ஒரு பழக்கம் இல்லை என்றால் நீங்கள் பெரிய விஷயம் ஒன்றை தவறவிடுகிறார்கள்.
செய்திகள் படிக்கும் இன்பத்தை தவற விடுகிறார்கள். செய்திகள்தான் தினமும் உங்கள் காலையை வரவேற்கிறது. பலருக்கு தினமும் காலையில் செய்திகள் படிக்கும் வழக்கம் இருந்திருக்கும். அவர்களுக்கு காலை செய்திகள் இல்லாமல் முடியாது.
செய்திகள் என்பது உலகத்தை சுமந்து வருகிறது. ஏன் நம்முடைய ஸ்மார்ட் போன்களிலேயே நாம் இப்போதைய காலங்களில் செய்திகளை படிக்க முடியும். இதை படிப்பதன் மூலம் நமக்கு நாட்டு நடப்பு எல்லாம் தெரியும். உலகம் முழுக்க நடக்கும் விஷயங்கள் தெரிய வரும்.
அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, சமூகம், வணிகம் என்று பல விஷயங்கள் குறித்து செய்திகள் வருகிறது. செய்திகளை படிப்பதன் மூலம் மக்களுக்கு இது தெரிய வரும். இதை மக்கள் ஒரு வழக்கமாக மாற்றுவதன் மூலம் மக்களின் வாழ்க்கை மாறும்.
அதன்படி 2019ம் ஆண்டில் நிறைய செய்திகள் தினமும் படிப்பேன் என்று மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். செய்திகள் படிப்பதை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இதன்மூலம் 2019ம் ஆண்டை நல்ல பயனுள்ள ஆண்டாக மாற்ற வேண்டும்.