கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எந்த செல்போனை பயன்படுத்துகிறார் தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்
டெல்லி: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை எந்த செல்போனை பயன்படுத்துகிறார் தெரியுமா?
சுந்தர் பிச்சை கணினி பொறியாளர். இவர் கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி ஆவார். இணையம் தொடர்பான சேவைகளில் புகழ்பெற்ற நிறுவனமான கூகுள் 2015 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

சிஇஓ ஆன சுந்தர் பிச்சை கூகுள் குரோம், குரோம ஓ எஸ் உள்ளிட்ட கூகுளின் சில தயாரிப்புகள் நல்ல வெற்றியை கண்டன. இவர் ஐஐடி கோரக்பூரில் பிடெக் படித்திருந்தார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பயின்றார். அது போல் அவர் பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஃபயர்பாக்ஸ் போன்ற போட்டி நிறுவனங்களை மிஞ்சி கூகுள் குரோம் தனித்துவமான வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து பிச்சை சர்வதேச அளவில் அறியப்பட்டார். சுந்தர் பிச்சை ஒரு கிரிக்கெட் ரசிகர். அவருக்கு 12 வயது வரை அவரது குடும்பத்தில் யாரிடமும் செல்போன் வைத்திருக்கவில்லை.
அவர் கூகுளில் சேருவதற்கு முன்பு தனது நண்பரிடம் பேசியிருந்தார். தனது சிறுவயது முதலே டயல் செய்த தொலைபேசி எண்களை நினைவு வைத்திருப்பாராம். சுந்தர் பிச்சை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தாலும் அவர் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர். கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர்கள் சந்திப்பு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.
அப்போது பிக்சல் ஃபோல்ட் எனும் ஸ்மார்ட்போனை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது. இந்த மாடல் அந்த நிறுவனத்தின் முதல் மடிப்பு ரக ஸ்மார்ட்போன் ஆகும். இந்த நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரபல யூடியூபரான அருண் மைனியுடன் ஸ்மார்ட்போன்கள் குறித்து நீண்ட உரையாடலை நடத்தியிருந்தார்.
அப்போது பிக்சல் ஃபோல்ட் போனை பயன்படுத்துகிறீர்களா என கேட்கப்பட்டகேள்விக்கு பதிலளித்து பேசிய சிஇஓ சுந்தர் பிச்சை, ஆமாம் என கூறினார். அந்த போன் குறித்து மதிப்பிடுவதற்காக சில காலமாக பயன்படுத்தி வருவதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் தன்னுடைய விமான பயணங்களின்போதும், தன்னுடைய பிஸியான நாட்களிலும் இலகுமான போன்களை வைத்திருக்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் செய்வது எல்லாம் என்னுடைய போனை வெளியே எடுத்து விரைவாக மின்னஞ்சலை சரிபார்ப்பது மட்டுமே என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சிஇஓ சுந்தர் பிச்சை அவருடைய முதன்மை ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சஸ் 7 ப்ரோ உடன் சாம்சங் கேலக்ஸி மற்றும் ஐபோன் ஆகிய ஸ்மார்ட்போன் சிலவற்றை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தி வருகிறார். தான் பயன்படுத்தும் ஒவ்வொரு போனிலும் ஒவ்வொரு சிம்கார்டை அவர் வைத்திருப்பதையும் தெரிவித்திருந்தார்.
சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் தான் சுந்தர் பிச்சையின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டை சுந்தர் பிச்சையின் தந்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி இதைத் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் மணிகண்டன் விலைக்கு வாங்கியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications