கிருமிநாசினி சுரங்க பாதைகளால் ஆபத்து.. சுவாசித்தாலே நிமோனியா வரும்.. டாக்டர்கள் வார்னிங்
டெல்லி: கிருமிநாசினி சுரங்கப் பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவர்கள் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வதற்கு கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் எனப்படும் கிருமிநாசினி திரவம் கொண்டு 20 நிமிடங்கள் கை கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் ஆங்காங்கே கிருமிநாசினி திரவமும் தெளிக்கப்படுகின்றன.
உயரமான கட்டடங்களுக்கு ராட்சத கிரேன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்த நிலையில் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக காய்கறி வாங்க மார்க்கெட் பகுதிகளுக்கு வருகிறார்கள்.

மார்க்கெட்டுகள்
என்னதான் மைதானங்களில் மார்க்கெட்டுகள் வைக்கப்பட்டாலும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இதனால் கிருமிநாசினி சுரங்கபாதை வைக்கப்பட்டு அதில் 10 வினாடிகளுக்கு கடக்கும் மக்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இது போல் கிருமிநாசினி தெளிப்பதால் பாக்டீரியா, வைரஸ்கள் சாகாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறான எண்ணம்
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் என இதுவரை விஞ்ஞான ரீதியிலான நிரூபணம் ஆகவில்லை. கிருமிநாசினியில் கலக்கப்படுவது சோடியம் ஹைப்போகுளோரைட்டு தெளித்தால் கிருமிகள் அண்டாது என மக்கள் மனதில் தவறான எண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிருமிநாசினிகளை தெளிக்குமாறு உலக சுகாதார நிறுவனம், அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியன அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்
இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. கிருமிநாசினிகளில் சோடியம் ஹைப்போகுளோரைட்டு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என WHO சொல்லவில்லை. தரைகளை சுத்தப்படுத்துதல், டேபிள் உள்ளிட்ட பர்னிச்சர்களை சுத்தப்படுத்தவும் ஹைப்போகுளோரைட்டு திரவம் பயன்படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை
எனவே இவற்றை வைரஸை கட்டுப்படுத்தவோ அறுவை சிகிச்சை அரங்கங்களிலோ தெளிக்கக் கூடாது. இவற்றை உள்ளங்கைகளில் வைத்து தேய்க்கக் கூடாது. கொரோனா வைரஸானது நுரையீரல் குழாய்களில் தங்கியுள்ளன. எனவே அவை பரவாமலிருக்க மாஸ்க் அணியலாம். மற்றபடி கிருமிநாசினி சுரங்கப்பாதைகள் வேலைக்கு ஆகாது. ஹைட்ரஜன் பெராக்சைடு கண், தோலில் பட்டால் ஒப்பாமையை ஏற்படுத்தும். இந்த திரவம் நமது நுரையீரலில் அதிகம் நுழைந்துவிட்டால் அதுவே நிமோனியா, நுரையீரல் எடீமா, உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும். எனவே புதிய கிருமிநாசினி சுரங்கப்பாதைகளை அமைப்பதை நிறுத்துங்கள். ஏற்கெனவே அமைக்கப்பட்ட கிருமிநாசினி சுரங்கப் பாதைகளை பயன்படுத்தாதீர் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications