வீட்டு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்.. சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற ‛‛வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது'' என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. ஆனால் இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் முதலாளி கொடுக்கும் சம்பளத்தை தான் பெற வேண்டிய சூழல் உள்ளது. சம்பளம் உயர்த்தி கேட்டு கிடைக்காவிட்டால் அந்த பணியை விட்டு வேறு இடத்தில் தான் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் தான் பெண் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛‛நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கான சம்பள பாதகாப்பு இல்லை. இதனால் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதிட்டார்.
அப்போது அவர், ‛‛வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காதது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். வீட்டு பணியாளர்களாக பெண்களே அதிகம் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ளனர். இவர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பு இல்லை.
சிங்கப்பூர் போன்ற பல ஆசிய நாடுகளில் வீட்டுப் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை மற்றும் குறைந்தபட்ச சேவை நிபந்தனைகள் போன்ற சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இல்லாமல் பணிக்கு அமர்த்த முடியாது. இதனால் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று கூறினார்.
உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்த வாதத்தை கேட்ட பிறகு உச்சநீதிமன்றம் கூறியதாவது: வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது.
குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது. ஏனென்றால் சட்டமியற்றும் துறையின் வரையறைக்குள் நீதித்துறையால் தலையீடு செய்ய முடியாது.
சுரண்டல் இருப்பதாக கவலை
சட்டமியற்றும் அதிகாரத்தில் இருப்போரிடம் அதற்கான சட்டத்தை இயற்ற கேட்காத வகையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பெண் தொழிலாளர் சங்கம் வீட்டு பணியாளர்களின் அவல நிலையை சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும். ஏனென்றால் உழைப்பு சுரண்டல் இருப்பது உண்மை தான். ஆனால் சுரண்டலை கையாள்வதற்கு வேறு பல வழிகள் உள்ளன.
மக்கள் தங்கள் தனிப்பட்ட உரிமைகள் பற்றி இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்னும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் அரசுகள் இதுபோன்ற உழைப்பு சுரண்டலை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
தொழிற்சங்கம் மீது விமர்சனம்
அதுமட்டுமின்றி ஒருமுறை குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் சிலர் அவர்களை வேலைக்கு அமர்த்த மறுக்கலாம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு குடும்பமும் வழக்குக்குள் இழுக்கப்படும். இந்த பணியை தொழிற்சங்கங்கள் செய்யும். இந்த நாட்டில் தொழிற்சங்கங்கங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருந்துள்ளது. தொழிற்சங்கங்களை பயன்படுத்தி எத்தனை தொழில்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
உண்மையை நாம் அறிய வேண்டும். நாட்டின் பாரம்பரிய தொழில்கள் அனைத்தும் தொழிற்சங்கங்களால் மூடப்பட்டு விட்டன. அவர்கள் வேலை செய்ய விரும்பவில்லை. இந்த தொழிற்சங்க தலைவர்கள்தான் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பாக உள்ளனர்'' என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications