வாழ்நாள் முழுவதும் வெள்ளி மங்கை மீராபாய் சானுவிற்கு இலவச பீட்சா.. டொமினோஸ் சர்பிரைஸ்!
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மங்கை மீராபாய் சானுவிற்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்குவதாக டொமினோஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Recommended Video
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி தொடங்கின. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டி தொடங்கிய முதல் நாளே மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி
2000ஆம் ஆண்டு கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெண்கலம் வென்றார். அதன் பின்னர் ஒலிம்பில் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை சானு ஆவார். மொத்தம் 202 கிலோ (87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

ரியோவில் தோல்வி
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்த சானு தற்போது வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியின் போது அவரிடம் "நீங்கள் வந்த வேலையும் (பதக்கம் வெல்ல வந்த வேலை) உங்கள் நிகழ்ச்சியும் முடிந்து விட்டதே. இனி என்ன செய்வீர்கள்" என கேட்டனர்.

பீட்சா பிடிக்கும்
அதற்கு மீராபாய், எனக்கு மிகவும் பிடித்த பீட்சாக்களை சாப்பிடுவதில் நேரத்தை செலவிடுவேன் என்றார். அனைவருக்கும் சர்பிரைஸாக இருந்த இந்த பதிலை டொமினோஸ் பீட்சாவும் கேட்டது. இதையடுத்து அந்த பீட்சா நிறுவனம் டிவிட்டரில் சனிக்கிழமை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

சானுவுக்கு இலவச பீட்சா
அதில் தாய்நாட்டுக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற சானுவுக்கு வாழ்த்துகள். கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நீங்கள் நனவாக்கிவிட்டீர்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா கொடுக்காவிட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளுடன்" என டொமினோஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications