காஷ்மீர் விவகாரத்தில் அவசரபட வேண்டாம்.. மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை!
காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் திடீர் என்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக அங்கு நடக்கும் மாற்றங்கள் போர் வருமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு புதிதாக 35000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனைக்கு பின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம். அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை கூட்டி விவாதம் செய்தோம். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்டுவது போல தெரிகிறது. அங்கு இருக்கும் பயணிகளை எல்லாம் வெளியேற சொல்லி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் மக்கள் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள், என்று காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications