Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் இளம் குடியரசு தலைவராகும் திரௌபதி முர்மு! பெற்ற வாக்குகளை எவ்வளவு தெரியுமா? முழு தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் இளம் குடியரசுத் தலைவர் என்ற பெயரைத் திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.

குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர்.

 குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல்

கடந்த ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு


இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. எதிர்பார்த்ததை காட்டிலும் திரௌபதி முர்மு அதிக வாக்குகளைப் பெற்றார். இதனால் மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இதன் மூலம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 இளம் ககுடியரசு தலைவர்

இளம் ககுடியரசு தலைவர்

ராம்நாத் கோவிந்திற்கு பின்னர், நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்க உள்ள திரௌபதி முர்மு, ஒடிசாவில் ஒரு கவுன்சிலராக பொது வாழ்க்கையைத் தொடங்கியவர். 64 வயதாகும் இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ள, இவர் தான் இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்..

Recommended Video

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்குத் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
     சுதந்திரத்திற்குப் பின்னர்

    சுதந்திரத்திற்குப் பின்னர்

    வரும் ஜூலை 25ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு பதவி ஏற்க உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பிறந்த முதல் குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு இருக்கப் போகிறார். மூன்றாவது சுற்று முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2161 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் எஸ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். அதேபோல யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+