இந்தியாவின் இளம் குடியரசு தலைவராகும் திரௌபதி முர்மு! பெற்ற வாக்குகளை எவ்வளவு தெரியுமா? முழு தகவல்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் இளம் குடியரசுத் தலைவர் என்ற பெயரைத் திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
கடந்த ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

திரௌபதி முர்மு
இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. எதிர்பார்த்ததை காட்டிலும் திரௌபதி முர்மு அதிக வாக்குகளைப் பெற்றார். இதனால் மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இதன் மூலம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இளம் ககுடியரசு தலைவர்
ராம்நாத் கோவிந்திற்கு பின்னர், நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்க உள்ள திரௌபதி முர்மு, ஒடிசாவில் ஒரு கவுன்சிலராக பொது வாழ்க்கையைத் தொடங்கியவர். 64 வயதாகும் இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ள, இவர் தான் இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்..
Recommended Video

சுதந்திரத்திற்குப் பின்னர்
வரும் ஜூலை 25ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு பதவி ஏற்க உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பிறந்த முதல் குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு இருக்கப் போகிறார். மூன்றாவது சுற்று முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2161 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் எஸ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். அதேபோல யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications