தேர்தல் நடக்குதுல்ல.. 5 மாநிலங்களில் மத்திய அரசின் ‘பிரசார’ யாத்திரைக்கு தேர்தல் ஆணையம் அதிரடி தடை!
டெல்லி: மத்திய அரசின் திட்டங்களை பிரசாரம் செய்யும் சங்கல்ப யாத்திரையை சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடத்த கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சகமானது Viksit Bharat Sankalp Yatra என்ற யாத்திரையை நடத்த உள்ளது. இந்த யாத்திரை நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது.

நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. தகவல் தொடர்பு வசதிகளுடன் 2,700-க்கும் மேற்பட்ட வேன்கள் ரதங்களின் வடிவத்தில் இந்த பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும். இப்பிரசாரத்தின் போது மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பழங்குடியினத்தவர் வசிக்கும் பகுதிகளுக்கு முதலில் இந்த யாத்திரை வேன்கள் செல்லும். மொத்தம் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 3,700 நகராட்சிகள் என 14,000-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ரத வேன்கள் பயணிக்கும். இப்பயணத்தின் போது பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கான கிரெடி கார்டு திட்டம் ஆகியவை இந்த பிரசாரத்தின் முக்கிய அம்சங்கள்.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த பிரசாரம், சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தொடங்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி தடை விதித்துள்ளது. இதனால் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் டிசம்பர் 5-ந் தேதி க்குப் பின்னர் இந்த பிரசார யாத்திரை நடைபெறும்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இம்மாநிலங்களில் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் டிசம்பர் 5-ந் தேதி வரை 5 மாநிலங்களிலும் மத்திய அரசின் பிரசார யாத்திரைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications