டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ல் தேர்தல்.. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.. ஆரம்பித்தது அரசியல் ஜுரம்
டெல்லி: டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சட்டசபை தேர்தல் நடத்த 4 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், காவல் துறை ஆணையருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி 1 கோடியே 46 லட்சத்து 92 வாக்காள்ர்கள் உள்ளனர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இந்த தேர்தலில் 90 ஆயிரம் காவலர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். மூத்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் வாகன வசதி செய்து தரப்படும். சட்டசபை தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த ஆணையம் உறுதியாக உள்ளது.13,750 மையங்களில் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 21-ஆம் தேதி முடிவடைகிரது. வேட்புமனு பரிசீலனை ஜன 22-இல் நடைபெறுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications