Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுவதும் விரைவில் தீவிர வாக்காளர் திருத்த பணி? தேர்தல் ஆணையம் நடத்தும் முக்கிய ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் விரைவில் தீவிர வாக்காளர் திருத்த பணி நடத்த உள்ளதாகவும் இதற்காக முக்கிய ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் (EC- Election Commission) செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு, அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

ec-to-hold-talks-with-states-on-intensive-voter-list-revision

நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணி

பீகாரில் நடைபெற்ற இந்த சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இது ஒருபக்கம் இருக்க, விரைவில் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதாவது வரும் 10ஆம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்போது தொடங்கப்படும்?

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. தற்போது அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் ஆலோசனையின் போது விரிவான விவரங்களை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 10 ஆம் தேதி ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்ற பிறகு நடைபெறக் கூடிய மூன்றாவது ஆலோசனை இதுவாகும். நாடு தழுவிய அளவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக தயார் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுவதால், வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு, அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்பாக இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+