நாடு முழுவதும் விரைவில் தீவிர வாக்காளர் திருத்த பணி? தேர்தல் ஆணையம் நடத்தும் முக்கிய ஆலோசனை!
டெல்லி: நாடு முழுவதும் விரைவில் தீவிர வாக்காளர் திருத்த பணி நடத்த உள்ளதாகவும் இதற்காக முக்கிய ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் (EC- Election Commission) செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு, அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணி
பீகாரில் நடைபெற்ற இந்த சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இது ஒருபக்கம் இருக்க, விரைவில் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதாவது வரும் 10ஆம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது தொடங்கப்படும்?
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. தற்போது அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் ஆலோசனையின் போது விரிவான விவரங்களை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 10 ஆம் தேதி ஆலோசனை
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்ற பிறகு நடைபெறக் கூடிய மூன்றாவது ஆலோசனை இதுவாகும். நாடு தழுவிய அளவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக தயார் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுவதால், வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு, அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்பாக இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications