Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.40,000 கோடி வங்கி மோசடி.. ரிலையன்ஸ் முன்னாள் இயக்குநர் புனித் கார்க்கை கைது செய்தது அமலாக்கத்துறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் புனித் கார்க்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் புனித் கார்க் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ரூபாய் 40,000 கோடிக்கும் அதிகமான வங்கி மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் புனித் கார்க்கை அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவுகள் 120B, 406 மற்றும் 420 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1989 இன் பிரிவு 13(1)(d) உடன் படிக்கப்பட்ட பிரிவுகள் 13(2) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட, சிபிஐ FIR இன் அடிப்படையில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து புனித் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

ED Arrests Reliance Former Director Punit Garg in Massive 40 000 Crore Bank Fraud Case

கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ பதிவு செய்த எப்ஐஆர்-ன் அடிப்படையில் புனித் கார்க் மீது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கப்பட்டது. 2001 முதல் 2025 வரை ரிலையன்ஸ் குழுமத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த புனித் கார்க், வங்கி நிதியைத் திசைதிருப்பியதில் முக்கியப் பங்காற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட பணத்தைச் சுமார் ரூபாய் 13,600 கோடி அளவுக்கு கடன்களுக்காகவும், ரூபாய் 12,600 கோடிக்கும் மேலாக தொடர்புடைய இதர நிறுவனங்களுக்கும் சட்ட விரோதமாக திசைதிருப்பியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நியூயார்க்கின் மேன்ஹாட்டனில் ₹70 கோடி ($8.3 மில்லியன்) மதிப்பிலான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதோடு, அதனைத் தற்காலிகத் தீர்வாணையத்தின் (CIRP) அனுமதியின்றி துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் ரகசியமாக விற்றுப் பணத்தைச் சுருட்டியது கண்டறியப்பட்டுள்ளது.

வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகையை புனித் கார்க் தனது குழந்தைகளின் வெளிநாட்டு கல்விச் செலவிற்காகப் பயன்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் 40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் புனித் கார்க்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் உள்ள PMLA-வின் கீழ் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கார்க் ஆஜர்படுத்தப்பட்டார். 9 நாட்கள் காவலில் வைக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. குற்றத்தின் மீதமுள்ள வருமானத்தைக் கண்டறியவும், பிற குற்றவாளிகளை அடையாளம் காணவும், முழுமையான பணமோசடி தடயத்தைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி உள்ளிட்ட சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ் செயல்படும் ஆர்.காம், ஆர்.எச்.எப்.எல் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் ரூபாய் 40,185 கோடி வரை நிலுவை வைத்துள்ள சூழலில், இந்தக் கைது நடவடிக்கை ரிலையஸ் குழுமத்திற்குப் பெரும் தலைவலி ஆகியுள்ளது.

புனித் கார்க் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸில் பல முக்கிய பதவிகளை வகித்தார். 2006 முதல் 2013 வரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய நிறுவன வணிகத்தைக் கையாளும் தலைவராகவும், பின்னர் 2014 முதல் 2017 வரை தலைவராக (ஒழுங்குமுறை விவகாரங்கள்) பணியாற்றினார்.

அக்டோபர் 2017 இல், அவர் RCOM இன் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார், பின்னர் ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2025 வரை நிர்வாகமற்ற இயக்குநராகப் பணியாற்றினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+