அதிகாலை 3 மணிக்கு அதிரடி.. யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூரை கைது செய்தது அமலாக்கத்துறை!
யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், அமலாக்கத்துறை மூலம் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
டெல்லி: யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், அமலாக்கத்துறை மூலம் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
யெஸ் வங்கியின் மொத்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கைப்பற்றியுள்ளது. வங்கியில் நிலவிய நிறைய முறையற்று செயல்பாடுகள், முறைகேடுகள் காரணமாக யெஸ் வங்கிக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு கடன்களை அளித்தது, ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பொய்யான கடன் வழங்கியது, வாரா கடன் அதிகம் இருந்தும் லோன்களை திரும்ப பெறாதது, ஆகியவை இந்த வங்கி நிர்வாகம் மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு ஆகும்.
2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. இந்த வங்கியின் வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்து குறிப்பிடத்தக்கது. யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக எடுக்க முடியாது.
இதனால் மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் இதைவிட அதிகமாக பணம் எடுக்க முடியாது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், அமலாக்கத்துறை மூலம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தார். பணமோசடி, கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ரானா கபூர் அமலாக்கத்துறை மூலம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து விசாரிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அமலாக்கத்துறை ரானா கபூரை கைது செய்தது. டெல்லியில் அவரின் வீட்டில் வைத்து ராணா கப்பூரை போலீசார் கைது செய்தனர். ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து இருக்கிறது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications