ஆட்டம் ஆரம்பம்...பிரியங்கா கணவர் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை திடீர் மனு
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை திடீரென மனுத் தாக்கல் செய்துள்ளது.
லண்டனில் வதேரா சொத்து வாங்கியதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பது அமலாக்கத்துறையின் வழக்கு. இவ்வழக்கில் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா இருவர் மீதும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் இடைக்கால முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
வதேரா, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டது அமலாக்கத்துறை. இதை நிராகரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அமலாக்கத்துறை மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சாட்சிகளை வதேரா கலைத்துவிடுவார் என்பதால் அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்டம் ஆரம்பம்!












Click it and Unblock the Notifications