12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும்! மத்திய அரசு அதிரடி... என்ஐடி, எம்ஐடிகளில் சேர அற்புதமான வாய்ப்பு
டெல்லி: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு நீக்கியுள்ளதால், என்ஐடி, எம்ஐடி போன்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர அருமையான வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால், கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பல மாநிலங்களில் 10ம் வகுப்பு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சில மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

கல்லூரிகளில் சேர
இந்த சூழலில் அண்மையில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் 12ம் வகுப்பு தேர்வு முடிவினை வெளியிட்டன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.

மத்திய அரசு நீக்கம்
இந்நிலையில், தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் (என்ஐடி) சேருவதற்கு 12ம் வகுப்பில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க தேவையில்லை என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்ச்சி
மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வியாழக்கிழமை டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `நாட்டில் நிலவும் கொரோனா சூழல் காரணமாக, மத்திய இட ஒதுக்கீடு வாரியம், தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சேர்க்கையில் சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது.. ஜேஇஇ-2020 முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்.. அவர் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் முக்கியமில்லை" என்று கூறினார்.

செப்டம்பரில் நடைபெறும்
பொதுவாக என்ஐடி., மத்திய நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இப்போது இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் செப்டம்பர் மாதம் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications