12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும்! மத்திய அரசு அதிரடி... என்ஐடி, எம்ஐடிகளில் சேர அற்புதமான வாய்ப்பு
டெல்லி: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு நீக்கியுள்ளதால், என்ஐடி, எம்ஐடி போன்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர அருமையான வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால், கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பல மாநிலங்களில் 10ம் வகுப்பு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சில மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

கல்லூரிகளில் சேர
இந்த சூழலில் அண்மையில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் 12ம் வகுப்பு தேர்வு முடிவினை வெளியிட்டன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.

மத்திய அரசு நீக்கம்
இந்நிலையில், தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளில் (என்ஐடி) சேருவதற்கு 12ம் வகுப்பில் குறைந்தப்பட்சம் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க தேவையில்லை என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்ச்சி
மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வியாழக்கிழமை டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `நாட்டில் நிலவும் கொரோனா சூழல் காரணமாக, மத்திய இட ஒதுக்கீடு வாரியம், தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் சேர்க்கையில் சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது.. ஜேஇஇ-2020 முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்.. அவர் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் முக்கியமில்லை" என்று கூறினார்.

செப்டம்பரில் நடைபெறும்
பொதுவாக என்ஐடி., மத்திய நிதி உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இப்போது இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் செப்டம்பர் மாதம் 1 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications