சரத்பவார் வீட்டில் 8 எதிர்க்கட்சிகள் அவசர மீட்டிங்.. காங்கிரஸ் ஆப்சென்ட்.. கூட்டத்தில் பேசியது என்ன?
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் 8 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. ஆனால் இதில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடர்ந்து முயன்று வருகிறார்.

சரத்பவார் முயற்சி
இது தொடர்பாக ஒரு திட்டத்தை கையில் வைத்துள்ள சரத்பவார், மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடந்தினார். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறிய பிரசாந்த் கிஷோருடன் சரத்பவார் நடத்திய ஆலோசனை பரபரப்பாக பேசப்பட்டது.

8 கட்சிகள் ஆலோசனை
இந்த ஆலோசனையில் எடுத்த முடிவின்படி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி அவரது வீட்டில் 8 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒருவரும், தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா, ஆர்.எல்.டி.யின் ஜெயந்த் சவுத்ரி, சமாஜ்வாடி கட்சியின் கன்ஷ்யம் திவாரி; ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா, சிபிஐயின் பினாய் விஸ்வாம் மற்றும் சிபிஎம்மின் நிலோட்பால் பாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைக்க சரத்பவார் முயற்சிப்பதாகவும், இதனால்தான் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் பரவின. கூட்டம் முடிந்ததும் இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மஜீத் மேமனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், '' இந்த கூட்டத்துக்கு யஷ்வந்த் சின்ஹாதான் அழைப்பு விடுத்தார். சரத் பவார் அல்ல, இது ஒரு அரசியல் சந்திப்பு அல்ல.

காங்கிரசுக்கு அழைப்பு
இந்த சந்திப்பு காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக நடந்ததாக பேச்சுக்கள் உலா வருகின்றன. இது உண்மை அல்ல. பாகுபாடு இல்லை. நாங்கள் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் அனைவரையும் அழைத்தோம். காங்கிரசுக்கும் அழைப்பு விடுத்தோம். நான் விவேக் தன்ஹா, மனிஷ் திவாரி, அபிஷேக் சிங்வி, சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

அரசியல் கூட்டம் அல்ல
''இது ஒரு அரசியல் கூட்டம் அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட நாங்கள் கொரோனா பிரச்சினை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்'' என்று சிபி.எம்.மின் நிலோட்பால் பாசு நிருபர்களிடம் கூறினார். சரத்பவார் முயற்சி வெற்றி பெறுமா? பாஜகவுக்கு எதிரான 3-வது அணி அமையுமா? அந்த அணி மோதும் அளவுக்கு வலுவாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications