அசாம் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள்.. இது SIR மாதிரி இல்லை.. தேர்தல் ஆணையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் SIR போல அல்லாமல், அசாமில் வாக்காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை உறுதி செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். இந்த பட்டியலில் தான் தற்போது அசாம் மாநிலமும் இணைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

Assam SIR Election commission

இதுதொடர்பாக அசாம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை பிறப்பித்து உள்ளது. அதன்படி சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள அசாம் மாநிலத்திற்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தகுதி தேதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய பலர் அந்த மாநிலத்தில் வாக்காளர்களாக பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) நிலை நிலுவையில் உள்ளதால், தேர்தல் ஆணையம் அசாஅம் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் 2019 ஆம் ஆண்டு NRC பட்டியலில் 3.3 கோடி விண்ணப்பதாரர்கள் இருந்த பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 19.6 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அசாமில் வாக்காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை உறுதி செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அவசர அவசரமாக எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக்கூறி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தில் SIR பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+