அபிநந்தன் குறித்து பிரச்சாரம் செய்த மோடி.. எந்த தப்பும் இல்லையே.. தேர்தல் ஆணையம் தீர்ப்பு!
பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக தொடுக்கப்பட்ட புகார்களில் வரிசையாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. திங்கள் கிழமைக்குள் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் தேர்தல் ஆணையம் வேகமாக மோடிக்கு எதிரான புகார்கள் மீது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவரும் மீதும் 6க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது.

5 வழக்குகள் தீர்ப்பு
இதில் 5 வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில புகார்களின் மீது தேர்தல் ஆணையம் இன்று நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த புகாரிலும் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன
அதன்படி நேற்று பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 6 வது புகார் ஆகும். பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள பதன் பகுதியில் பிரச்சாரம் செய்த போது பாகிஸ்தானுக்கு எதிராக பேசினார்.

என்ன பேசினார்
அதில், பாகிஸ்தானை நான் கடுமையாக எச்சரித்து இருந்தேன். அபிநந்தன் அங்கு சிறை பிடிக்கப்பட்டு இருந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். அபிநந்தனை விடுக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினேன். அதனால்தான் அவர் விடுவிக்கப்பட்டார் என்று மோடி பேசி இருந்தார்.

தவறு இல்லை
இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ராணுவம் குறித்தும், ராணுவ அதிகாரிகள் குறித்தும் பிரச்சாரத்தில் பேச கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால் மோடி அதை மீறி தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில்தான் மோடி எந்த தவறும் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications