அபிநந்தன் குறித்து பிரச்சாரம் செய்த மோடி.. எந்த தப்பும் இல்லையே.. தேர்தல் ஆணையம் தீர்ப்பு!
பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக தொடுக்கப்பட்ட புகார்களில் வரிசையாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. திங்கள் கிழமைக்குள் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் தேர்தல் ஆணையம் வேகமாக மோடிக்கு எதிரான புகார்கள் மீது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவரும் மீதும் 6க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது.

5 வழக்குகள் தீர்ப்பு
இதில் 5 வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது. இன்னும் சில புகார்களின் மீது தேர்தல் ஆணையம் இன்று நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த புகாரிலும் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன
அதன்படி நேற்று பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 6 வது புகார் ஆகும். பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள பதன் பகுதியில் பிரச்சாரம் செய்த போது பாகிஸ்தானுக்கு எதிராக பேசினார்.

என்ன பேசினார்
அதில், பாகிஸ்தானை நான் கடுமையாக எச்சரித்து இருந்தேன். அபிநந்தன் அங்கு சிறை பிடிக்கப்பட்டு இருந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். அபிநந்தனை விடுக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினேன். அதனால்தான் அவர் விடுவிக்கப்பட்டார் என்று மோடி பேசி இருந்தார்.

தவறு இல்லை
இதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ராணுவம் குறித்தும், ராணுவ அதிகாரிகள் குறித்தும் பிரச்சாரத்தில் பேச கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால் மோடி அதை மீறி தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில்தான் மோடி எந்த தவறும் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications