அடிச்சு தூக்கும் ஆம் ஆத்மி.. கிடைத்தது தேசிய கட்சி அங்கீகாரம்! இழந்த இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமூல்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேசிய கட்சிக்கான அந்தஸ்தை வழங்கி இருக்கிறது. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் குறிப்பிட்டு சதவீத வாக்கு வங்கியை வைத்து இருக்கிறது. அதே நேரம் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சி தேசிய அந்தஸ்தை இழந்து இருக்கின்றன.
இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை வைத்து அதற்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அங்கீகாரம் தங்களுக்கு மேலும் பொறுப்புணர்வை அதிகப்படுத்துவதாக ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய கட்சியா? இது அதிசயம் இல்லாமல் வேறு என்ன. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எங்களை இந்த நிலைக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். மக்கள் எங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் இன்று எங்களுக்கு இந்த மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து உள்ளனர். இந்த பொறுப்பை பரிபூரணமாக செய்ய கடவுள் எங்களை ஆசீர்வதித்திக்க வேண்டும்." என்றார்.
அதே நேரம் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளன. ஆம், இந்த 2 கட்சிகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்று இருந்த நிலையில் தற்போது அந்த அந்தஸ்தை இழந்து இருக்கின்றன. அதைவிட நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை பரப்பி இருக்கும், பழமையான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பறிகொடுத்து உள்ளது.

இந்தியாவில் ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெறுவதற்கு, 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சியை நடத்த வேண்டும். அல்லது மக்களவையில் 2 சதவீத சீட்டுகளை பெற்று இருக்கும் கட்சி தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெறும். தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழப்பதால் நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிடும்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னம் ஒதுக்கப்படாது.
உதாரணத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் கர்நாடகாவில் போட்டியிட்டால் அக்கட்சிக்கு புதிய சின்னமே இனி ஒதுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவில் தற்போது 6 தேசிய கட்சிகளே உள்ளன. காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை இதில் இடம்பெற்று இருக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications