தெலுங்கானாவுக்கு "ஸ்பெஷல் மெசேஜ்.." 4 மாநில தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி சொன்னது இதுதான்
டெல்லி: 3 மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் வழங்கியுள்ள இந்த அசாதாரண ஆதரவிற்கு நன்றி. மக்கள் நலனிற்காக தொடர்ந்து அயராது பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக அரையிறுதி என்று வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் மிசோரம் தவிர்த்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்களின் படி சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது.
மக்கள் துணை நிற்கின்றனர்: தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. தெலுங்கானாவில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பிற மூன்று மாநிலங்களில் வெற்றியை பெற்று இருப்பது பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் ஹேப்பி மோடில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- நல்ல நிர்வாகம், வளர்ச்சி அரசியலுடன் மக்கள் உறுதியாக துணை நிற்கின்றனர் என்பதை சத்தீஷ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
இந்த 3 மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் வழங்கியுள்ள இந்த அசாதாரண ஆதரவிற்கு நன்றி. மக்கள் நலனிற்காக தொடர்ந்து அயராது பணியாற்றுவோம். பாஜக நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள். அவர்களது பணி ஈடு இணையற்றது. பாஜகவின் வளர்ச்சி அஜெண்டாவில் மக்கள் மத்தியில் அயராது கொண்டு சென்றவர்கள் இவர்கள் தான் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவுக்கு நன்றி: இதேபோல் தெலுங்கானா மாநில தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், "தெலுங்கானா மாநில சகோத சகோதரிகளே.. பாஜகவுக்கு வழங்கியுள்ள ஆதரவிற்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவின் மீது தெலுங்கானா மக்கள் காட்டும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
தற்போது நடந்த தேர்தல் முடிவும் இதனையே காட்டுகிறது. தெலுங்கானா மக்களுடைய பிணைப்பு பிரிக்க முடியாதது. தெலுங்கானா மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications