பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வியாழக்கிழமை இரவு சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். முன்னதாக, அமித் ஷாவை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஹோட்டலில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணியும் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்தே களம் காண்கிறது.

இந்தச் சூழலில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இன்னும் எட்டப்படவில்லை. பாஜக 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக குக்கர் சின்னத்துக்கு பதிலாக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
180 முதல் 185 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் அமித்ஷாவிடம் தகவல் தெரிவிக்க, அவரது அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வியாழக்கிழமை மதியம் டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், "டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளைக்கு விரிவாக சொல்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
பின்னர் வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சந்திப்பதாக அமித் ஷா நேரம் கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில் சுமார் 2 மணி நேரமாக ஹோட்டலில் காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. நீண்ட நேரமாக ஹோட்டலிலேயே எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிந்ததால் இன்று அமித் ஷா எடப்பாடி சந்திப்பு நடக்கப்போவதில்லை என தகவல்கள் பரபரத்தன.
இந்நிலையில், 10.30 மணிக்கு ஹோட்டலில் இருந்து, அமித் ஷா வீட்டுக்குப் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி சந்திப்பை நிறைவு செய்துவிட்டு புறப்பட்டார்.
அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரு கட்சிகளும் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கேயே தொகுதி பங்கீட்டை பேசி முடிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வருகின்றன.
-
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்?












Click it and Unblock the Notifications