சீனாவில் மூடப்பட்ட மருந்து நிறுவனங்கள்! இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அபாயம்
Recommended Video
டெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்திய மருந்து உற்பத்தி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில மருந்து தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்தியா 70 சதவீத மருந்து மற்றும மூல பொருட்களுக்கு சீனாவையே நம்பி உள்ள நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் தலைவலி, காய்ச்சல், நீரழிவு நோய் மருந்துகள் உள்பட அத்தியாவசிய மருந்துகள் இந்த மாதம் வரையே இந்தியாவில் இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தொழில் கூட்டமைப்பு
சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு பல்வேறு தொழில்துறைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் இந்தியாவிலும் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தொழில் துறையினரிடம் இருந்து பெற்ற தகவலின்படி சில தகவல்களை அறிக்கையில் கூறியுள்ளது.

2மாதம் வரை இருப்பு
அதில் கொரோனா வைரசால் மருந்து பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா 70 சதவீத மருந்து தேவைகளுக்கு சீனாவையே நம்பி உள்ளது. சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதம் வரை தான் உள்ளது. ஆனால் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பாராசிட்டமால்
வலி நிவாரணியாக பயன்படும் புரூபன், வலி நிவாரணி மற்றும காய்ச்சல், தலைவலிக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டெல்மிசார்டான், நோய் எதிர்ப்பு மருந்துகளான ஜென்டாமைசின் சல்பேட், ஆடமபிசிலின் டிரைஹைட்ரேட், சிப்ரோ பிளாக்சன் ஹைட்ரோ குளோரைடு ஆகியவை இந்த மாதம் 20ம் தேதி வரை தான் இருப்பு உள்ளது.

நீரழிவு மருந்து
இதேபோல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான நியோமைசின் சல்பேட்டும் 20ம் தேதி வரைக்கும் தான் இருப்பு உள்ளது. நீரழிவு மருந்தான ஹெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மார்ச் 20ம் தேதி வரை தான் இருப்பு உள்ளது. ஆனால் சீனாவில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது.இந்த மாதமும் மூடப்பட்டால் இந்தியாவில் மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கும் என தொழில் கூட்டமைப்பு தனது அறிக்கையில் கூறி உள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications