இந்தியாவில் "இவிஎம்" ஒரு கருப்பு பெட்டி.. ராகுல் காந்தி மீண்டும் பரபர குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ள் ஏஐ மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து சிறியதாக இருந்தாலும், அதிகமாகவே உள்ளது என்று எலான் மஸ்க் கூறிய நிலையில், ராகுல் காந்தி இவிஎம் இயந்திரங்களை கருப்பு பெட்டி என விமர்சித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இவிஎம் எனப்படும் இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில், தான் தற்போது உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி கூறிய கருத்து மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குப்பதிவு முறைகேடுகள் தொடர்பாக சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் தளத்தில் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.
அதில், "போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் இவிஎம் இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால், வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஆவணங்கள் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?" என்று கூறியிருந்தார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டு இருந்த பதிவுக்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க், இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் மனிதர்கள் அல்லது ஏஐ மூலமாக ஹேக் செய்யும் ஆபத்து உள்ளது என்ற ரீதியில் பதிவிட்டு இருந்தார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு இந்தியாவில் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கருப்பு பெட்டி எனக் கூறி சாடியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதவாது:-
இந்தியாவில் இவிஎம் என்பது கருப்பு பெட்டியாகும். வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செயய் யாருக்கும் அனுமதி கொடுப்பது இல்லை. தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படத்தன்மை தொடர்பாக தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன. அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் போது ஜனநாயகம் சீர்குலைந்துவிடும்" என்று கூறியுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications