மத்திய அமைச்சரானார் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ் ஜெய்சங்கர்
Recommended Video
டெல்லி: முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ் ஜெயசங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று இரவு 7 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. முதலில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் எஸ் ஜெய்சங்கருக்கு (64) மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டதை அடுத்து அவர் பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்கா, சீனா, சிங்கப்பூருக்கான இந்தியத் தூதராகவும் இருந்த இவர் கடந்த ஜனவரி 2015-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ஆம் ஆண்டு வரை வெளியுறவுத் துறை செயலாளராக ஓய்வு பெற்றார். இந்த காலகட்டத்தில் இந்தியா- சீனா இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லை பகுதியான டோக்லாம் பகுதியில் சீன நாட்டு ராணுவம் ஊடுருவிய போது அந்த பிரச்சினையை திறமையாக கையாண்டு முடித்து வைத்தார்.
1977-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறையில் பணியாற்றி வரும் நிலையில் இவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது இந்தியா- அமெரிக்கா இடையான அணுவாற்றல் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் பேரம் பேசியதில் முக்கிய பங்கு வகித்தார்.
தனது ஓய்வுக்கு பிறகு, இவர் டாடா சன்ஸ் குளோபல் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.












Click it and Unblock the Notifications