எக்ஸிட் போல் முடிவுகளை மாலை 6.30-க்குப் பின் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Exit poll 2019 | முடிவுகளை மாலை 6.30-க்குப் பின் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை மாலை 6.30 மணிக்கு பின்னர்தான் வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலின் 7-வது கட்ட வாக்குப் பதிவு இன்று 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் ஊடகங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட உள்ளன.

இக்கருத்து கணிப்பு முடிவுகளை இன்று மாலை 6.30 மணிக்குப் பின்னர்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஏனெனில் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்ட போது, ஏப்ரல் 11 காலை 7 மணி முதல்ல் மே 19 மாலை 6.30 மணிவரை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் இந்த அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications